Wednesday, March 6, 2013

எப்போதும் - கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

எவரும்
எப்போதும்
அவர்களேயல்ல.

குறிவைக்கும்
ஒற்றைக்கண்ணன்
ஊனமுற்றவனல்ல.

உறங்கும்போதும்
எண்ணும்போதும்
விழியிழந்தவன்
விழியிழந்தவனல்ல.

திருடன்
தன்வீட்டில் திருடனல்ல.

யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
பெரிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
சிறிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

- கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

No comments:

Post a Comment