Tuesday, November 22, 2011

நான் ஒரு முட்டாளுங்க - சந்திரபாபு

நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க

கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ..ஏ…ஏ.. கைதே …டாய்..
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுதுங்க..
நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க…

- சந்திரபாபு

No comments:

Post a Comment