Friday, September 23, 2011

ம‌னுஷ்ய‌ புத்திர‌ன்

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
ம‌ர‌ப்ப‌டிக‌ளில் இற‌ங்கி
வ‌ந்துகொண்டிருக்கிறாள்
அவ‌ளுக்கு
அது ஒரு பிர‌ச்னையே இல்லை

அவ‌ளாக‌க் க‌ற்பித்துக்கொண்ட‌
இந்த‌ உல‌கின் ஒழுங்கில்
ஏழாவ‌து ப‌டிக்குப் பிற‌கு
ஒன்ப‌தாவ‌து ப‌டி
வ‌ராத‌வ‌ரை

பார்வைய‌ற்ற‌ குழ‌ந்தை
நிதான‌மாக‌வே ப‌டிக‌ளில்
இற‌ங்கிக்கொண்டிருக்கிறாள்

No comments:

Post a Comment