Friday, September 23, 2011

முகுந்த் நாக‌ராஜ்

'குமரிப்பெண்' 'வினிதா'
'மும்தாஜ்' 'மருதம்'
'ஜாலி' 'கன்னி'
'இர‌வுப் ப‌ற‌வை' 'கும்த‌ல‌க்கா'
'உங்க‌ள் வ‌ச‌ந்தி' 'குளிர்கால‌ சுந்த‌ரி'
என்று ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ளைப்
ப‌டித்த‌ பின்ன‌ரும்
ப‌ள்ளிக்கூட‌த்திலிருந்து
திரும்பிவ‌ரும் வ‌ழியில்
ர‌யில் த‌ண்ட‌வாள‌த்தில் கிட‌ந்த‌,
அட்டையில்லாத‌
கிழிந்த‌ புத்த‌க‌ம் போல் ஒன்று
ப‌டிக்க‌க் கிடைக்க‌வில்லை இன்னும்.
அப்ப‌டி என்ன‌ விசேஷ‌ம்
அதில் என்று சொல்ல‌
அந்த‌ப் புத்த‌க‌ம்
என்னிட‌ம் இல்லை இப்போது
அந்த‌ வ‌ய‌தும்!

No comments:

Post a Comment