Friday, September 23, 2011

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்தான்
எண்ணூறு ஆண்டுகளா இதயத்தில் கனக்குதடி !

பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்!

இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை !
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை!

யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை !
இருவருமே தொடங்கிவிட்டோம் இதுவரைக்கும் கேள்வியில்லை !

அச்சம் களைந்தேன் ஆசையை நீ அணிந்தாய் !
ஆடை களைந்தேன் வெட்கைத்தை நீ அணிந்தாய் !

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கண்ணில் இன்னும் கொட்டுதடி !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

- வைரமுத்து

No comments:

Post a Comment