Monday, October 31, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

58. குறிஞ்சி - தலைவன் கூற்று - வெள்ளிவீதியார்

 இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
 நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
 ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
 கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
 வெண்ணெய் உணங்கல் போலப்
 பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!

 சுஜாதா: கண்ணால் காக்கும் வெண்ணை.

  நண்பா! திட்டுகிறாய்
  என் நோயை உன்னால்
  நிறுத்த முடிந்தால் நல்லது.
  வெயில் காயும் பாறை மேல்
  கையில்லாத ஊமை
  கண்ணால் காப்பற்ற வேண்டிய
  வெண்ணை போல
  உருகும் நோய் இது,
  தவிக்க முடியாது.
 
95. குறிஞ்சி - தலைவன் கூற்று - கபிலர்

 மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
 கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
 சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
 நீர் ஓரன்ன சாயல்
 தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே

 சுஜாதா: நீரும் நெருப்பும்

  நண்பா!
  மலையருவி பாறைகளில் வெடிக்கும்
  சிற்றூரின் தலைவனின் மகளின்
  நீர்போன்ற மென்மை
  நெருப்பைப் போன்ற என்
  வைராக்கியதைக்
  கெடுகிறது.

112. குறிஞ்சி - தலைவி கூற்று - ஆலந்தூர் கிழார்

 கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
 எள் அற விடினே உள்ளது நாணே
 பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 நாருடை ஒசியல் அற்றே
 கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே

 சுஜாதா: யானை முறித்த கிளை

  வதந்திக்கு அஞ்சினால்
  ஆசை குறைந்து விடும்.
  அஞ்சாவிட்டால்
  வெட்கம் மட்டுமே மிஞ்சும்
  யானை முறித்த பின்
  நிலத்தில் விழாமல்
  ஒடிந்த கிளையைப் போன்றது
  பார் தோழி, அவர் சுகித்த
  என் நிலைமை.

No comments:

Post a Comment