Monday, October 31, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

117. நெய்தல் - தோழி கூற்று - குன்றியனார்

 மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
 பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
 கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர்
 கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
 வாராது அமையினும் அமைக!
 சிறியவும் உள ஈண்டு விளைஞர் கைவளையே.

 சுஜாதா: நழுவாத சிறிய வளையல்

  மழைக்காலத்து ஆம்பல் போன்ற
  கொக்கின் பார்வைக்கு அஞ்சிய
  ஈர நண்டு
  இடையரின் கயிறை அறுத்துச் செல்லும்
  எருதைப் போல விரைந்து செல்லும்
  துறையைச் சேர்ந்தவன்
  வராவிட்டாலும் என்ன?
  வளையல்காரரிடம்
  சிறிய வளையல்களும் உள்ளன.
 
130. பாலை - தோழி கூற்று - வெள்ளிவீதியார்

 நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
 விலங்கு இரு முநீந்ர் காலின் செல்லார்
 நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
 குடிமுறை குடிமுறை தேரின்,
 கெடுநரும் உளரோ நம் காதலோரே.

 சுஜாதா: எப்படித் தப்புவார்?

  பூமியைத் தோண்டி புகுந்துகொள்ள முடியாது
  வானத்தில் ஏற முடியாது
  கடல்மேல் நடந்து செல்ல முடியாது
  நாடு நாடாக, ஊர் ஊராக,
  வீடு வீடாகத் தேடினால்
  அகப்படாமல் தப்பிவிடுவாரா
  என் காதலர்?

131. பாலை - தலைவன் கூற்று - ஒரேழுவனார்

 ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
 பேர் அமர்க கண்ணி இருந்த ஊரே
 நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
 ஈரம பட்ட செவ்விப் பைம் புனத்து
 ஓர் ஏர் உழவன் போலப்
 பேரு விதுப்பு உற்றன்றால் நோகா யானே.

 சுஜாதா: பெரிய வயல், ஒரே ஒரு ஏர்

  அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்
  சண்டையிடும் கண்கள்
  கொண்ட காதலி
  வெகு தூரத்தில் இருக்கின்றாள்.
  பசுமையான அகன்ற வயல் இருந்தும்
  ஒரே ஒரு ஏருள்ள உழவன் போல
  அவசரத்தில் தவிக்கின்றேன்.

No comments:

Post a Comment