Wednesday, October 12, 2011

மகளே - கமல்ஹாசன்

பிரதிபிம்பம் பழங்கனவு
மறந்த என் மழலையின் மறுகுழைவு
மகளே
உனக்கு என் மூக்கு என் நாக்கு!

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினம் உனக்காய் நான் படிப்பேன் என் குரலில்
பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன்
என் ரத்தம் எனது சதை எனக் கூவி
உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன்
உன் போக்கு இதுதான் என நீ மறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்!

அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால்
அன்று - நான் பேசலாம் உன்னோடு

எழுதிவிட்டேன்
வா - பேச!

No comments:

Post a Comment