Monday, October 31, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

136. குறிஞ்சி - தலைவன் கூற்று - மிளைபெருங் கந்தனார்

 காமம் காமம் என்ப; காமம்
 அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
 கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
 குளகு மென்று ஆள் மதம் போலப்
 பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.

 சுஜாதா: தழை தின்ற யானை

  காமம் காமம் என்கிறார்கள்
  காமம் வருத்தமில்லை; நோயில்லை;
  குறைவதில்ல; தணிவதில்லை.
  தழை தின்ற யானையின்
  மதம் போல
  பார்ப்பவர் பார்த்தால்
  அது வெளிப்படும்.

138. குறிஞ்சி - தோழி கூற்று - கொல்லன் அழிசி

 கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
 எம் இல் அயலது ஏழில் உம்பர்,
 மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
 அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
 மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 சுஜாதா: பூ உதிரும் ஓசை

  ஊரே தூங்கியும்
  நான் தூங்கவில்லை.
  எங்கள் வீட்டுக்கு வெளியே
  மயிலின் காலடி போன்ற இலைகள் கொண்ட
  நொச்சியின் கொம்பிலிருந்து
  மலர்கள் உதிர்வதுகூடக்
  கேட்கிறது.

No comments:

Post a Comment