Monday, October 31, 2011

Stopping By Woods on a Snowy Evening - Robert Frost

Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep.
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.


- Rober Frost

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 6

136. குறிஞ்சி - தலைவன் கூற்று - மிளைபெருங் கந்தனார்

 காமம் காமம் என்ப; காமம்
 அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
 கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
 குளகு மென்று ஆள் மதம் போலப்
 பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே.

 சுஜாதா: தழை தின்ற யானை

  காமம் காமம் என்கிறார்கள்
  காமம் வருத்தமில்லை; நோயில்லை;
  குறைவதில்ல; தணிவதில்லை.
  தழை தின்ற யானையின்
  மதம் போல
  பார்ப்பவர் பார்த்தால்
  அது வெளிப்படும்.

138. குறிஞ்சி - தோழி கூற்று - கொல்லன் அழிசி

 கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
 எம் இல் அயலது ஏழில் உம்பர்,
 மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
 அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
 மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

 சுஜாதா: பூ உதிரும் ஓசை

  ஊரே தூங்கியும்
  நான் தூங்கவில்லை.
  எங்கள் வீட்டுக்கு வெளியே
  மயிலின் காலடி போன்ற இலைகள் கொண்ட
  நொச்சியின் கொம்பிலிருந்து
  மலர்கள் உதிர்வதுகூடக்
  கேட்கிறது.

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 5

117. நெய்தல் - தோழி கூற்று - குன்றியனார்

 மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
 பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
 கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர்
 கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
 வாராது அமையினும் அமைக!
 சிறியவும் உள ஈண்டு விளைஞர் கைவளையே.

 சுஜாதா: நழுவாத சிறிய வளையல்

  மழைக்காலத்து ஆம்பல் போன்ற
  கொக்கின் பார்வைக்கு அஞ்சிய
  ஈர நண்டு
  இடையரின் கயிறை அறுத்துச் செல்லும்
  எருதைப் போல விரைந்து செல்லும்
  துறையைச் சேர்ந்தவன்
  வராவிட்டாலும் என்ன?
  வளையல்காரரிடம்
  சிறிய வளையல்களும் உள்ளன.
 
130. பாலை - தோழி கூற்று - வெள்ளிவீதியார்

 நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
 விலங்கு இரு முநீந்ர் காலின் செல்லார்
 நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
 குடிமுறை குடிமுறை தேரின்,
 கெடுநரும் உளரோ நம் காதலோரே.

 சுஜாதா: எப்படித் தப்புவார்?

  பூமியைத் தோண்டி புகுந்துகொள்ள முடியாது
  வானத்தில் ஏற முடியாது
  கடல்மேல் நடந்து செல்ல முடியாது
  நாடு நாடாக, ஊர் ஊராக,
  வீடு வீடாகத் தேடினால்
  அகப்படாமல் தப்பிவிடுவாரா
  என் காதலர்?

131. பாலை - தலைவன் கூற்று - ஒரேழுவனார்

 ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
 பேர் அமர்க கண்ணி இருந்த ஊரே
 நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே,
 ஈரம பட்ட செவ்விப் பைம் புனத்து
 ஓர் ஏர் உழவன் போலப்
 பேரு விதுப்பு உற்றன்றால் நோகா யானே.

 சுஜாதா: பெரிய வயல், ஒரே ஒரு ஏர்

  அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்
  சண்டையிடும் கண்கள்
  கொண்ட காதலி
  வெகு தூரத்தில் இருக்கின்றாள்.
  பசுமையான அகன்ற வயல் இருந்தும்
  ஒரே ஒரு ஏருள்ள உழவன் போல
  அவசரத்தில் தவிக்கின்றேன்.

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 4

58. குறிஞ்சி - தலைவன் கூற்று - வெள்ளிவீதியார்

 இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
 நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல
 ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்,
 கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
 வெண்ணெய் உணங்கல் போலப்
 பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!

 சுஜாதா: கண்ணால் காக்கும் வெண்ணை.

  நண்பா! திட்டுகிறாய்
  என் நோயை உன்னால்
  நிறுத்த முடிந்தால் நல்லது.
  வெயில் காயும் பாறை மேல்
  கையில்லாத ஊமை
  கண்ணால் காப்பற்ற வேண்டிய
  வெண்ணை போல
  உருகும் நோய் இது,
  தவிக்க முடியாது.
 
95. குறிஞ்சி - தலைவன் கூற்று - கபிலர்

 மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
 கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
 சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
 நீர் ஓரன்ன சாயல்
 தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே

 சுஜாதா: நீரும் நெருப்பும்

  நண்பா!
  மலையருவி பாறைகளில் வெடிக்கும்
  சிற்றூரின் தலைவனின் மகளின்
  நீர்போன்ற மென்மை
  நெருப்பைப் போன்ற என்
  வைராக்கியதைக்
  கெடுகிறது.

112. குறிஞ்சி - தலைவி கூற்று - ஆலந்தூர் கிழார்

 கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
 எள் அற விடினே உள்ளது நாணே
 பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
 நாருடை ஒசியல் அற்றே
 கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே

 சுஜாதா: யானை முறித்த கிளை

  வதந்திக்கு அஞ்சினால்
  ஆசை குறைந்து விடும்.
  அஞ்சாவிட்டால்
  வெட்கம் மட்டுமே மிஞ்சும்
  யானை முறித்த பின்
  நிலத்தில் விழாமல்
  ஒடிந்த கிளையைப் போன்றது
  பார் தோழி, அவர் சுகித்த
  என் நிலைமை.

Thursday, October 20, 2011

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 1

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 2

குறுந்தொகை கவிதைகள் - பாகம் 3

41. பாலை - தலைவி கூற்று - அணிலாடு முன்றிலார்

 காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
 சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
 அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
 மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற்
 புலப்பில் போலப் புல்லென்று
 அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே

 சுஜாதா: அணில் விளையாடும் முற்றம்

  காதலர் அருகில் இருக்கும் போது
  பெரிதாக விழா கொண்டாடும் ஊரைப்போல் மகிழ்வேன்.
  மக்கள் விலகிச்சென்ற சிற்றூரில்
  அணில் நடமாடும் முற்றம் போல
  உணர்கிறேன்
  அவர் விலகிச் சென்ற போது.

46. மருதம் -  தலைவி கொற்று - மாமிலாடனார்

 ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
 கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
 முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
 எருவின் நுண் தாது குடைவன ஆடி
 இல் இறைப் பள்ளித் தம பிள்ளையோடு வதியும்
 புன்கண் மாலையும் புலம்பும்
 இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே.

 சுஜாதா: தனிமையின் நிறம் சாம்பல்

  ஆம்பல் பூவின் சாம்பல் நிறத்தில்
  சிறகுடைய வீட்டுக்க் குருவி
  தானியங்களைப் பொறுக்கிச் சேர்த்து
  தன் குஞ்சுகளோடு விளையாடும்
  மாலை நேரமும் தனிமையும்
  அவர் சென்ற ஊரில்
  இல்லையோ?

58 குறிஞ்சி - தலைவி கூற்று - மீநெறிதூண்டிலார்

 யானே ஈண்டையேனே என் நலனே,
 ஏனர் காவலர் கவண் ஒழி வெரீஇக்
 கான யானை கை விடு பசுங் கழை
 மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
 கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே

 சுஜாதா: விலகிய வேகம்

  நான் இங்கே இருக்கின்றேன்
  என் நிலைமை
  கவண்கல் வீசுபவர் ஒலி கேட்டு
  பயந்து யானை கைவிடும்
  மூங்கில் போல;
  மீனகப்பட்ட தூண்டில் போல
  விரைவாக அவனுடன்
  பழகிய நாட்கள் கழிந்தன